ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இன்று உரையாற்றும் வெளியூறவு அமைச்சர்

149 0

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமானது.

தொடக்க நாள் அமர்வில் இலங்கை தொடர்பில் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் வாய்மூல அறிக்கையை வெளியிட்டார்.

இதன்போது அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை, சிவில் நிர்வாகக்கட்டமைப்புக்கள் இராணுவ மயமாக்கப்படல், நல்லிணக்கம், பொறுப்புக்றுல் மற்றும் மனித உரிமைகளின் நம்பகமான முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

இந் நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே வெளிவிவகார அமைச்சர் பேரசிரியர் ஜீ.எல். பீரிஸ், இணைய வழியூடாக கூட்டத் தொடரில் கலந்துக்கொண்டு உரையாற்றவுள்ளார்