மரக்கறி வியாபாரிகளிடையே மோதல்; ஒருவர் பலி, கைதானவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

218 0

மஹியங்கனை பொலிஸ் பிரிவில் மொரகெட்டிய பிரதேசத்தில் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

 

உயிரிழந்த நபர் 59 வயதுடைய மொரகெட்டிய , வேவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சம்பவம் தொடர்பில் இருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.