சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

272 0

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினரால் முகத்துவாரம் பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 12 400  சிகரட்டுக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள் முகத்துவாரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். முகத்துவாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.