குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு அரசியல்கைதிகளின் விடுதலைக்காக தீபங்கள் ஏற்றப்பட்டன. இன்று காலை 11.30 மணிக்கு யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில்,இருட்டுக்குள் இருக்கின்ற அரசியல்கைதிகளின் வாழ்வில் ஒளியூட்டுவதை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.