தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பான அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் உதவிச் செயலாளர் நீசா பிஸ்வால், அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார்.
இவருடன், அமெரிக்க ராஜாங்க திணைகளத்தின் தெற்காசியாவிற்கான பிரதி உதவி ராஜாங்க செயலாளர் மன்பிறிற் சிங் உம் இலங்கை வருகிறார்.
நீசா பிஸ்வால், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிற்கு செல்லும் நிலையில், பயங்கரவாத ஒழிப்புக்கு எதிராக அமெரிக்கா வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பாக தெளிவு படுத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டாக்காவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் பங்களாதேஷிற்கு செல்லும் உயர்மட்ட ராஜதந்திரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்கா விஜயத்தை நிறைவு செய்ததன் பின்னரே நீசா பிஸ்வால், இலங்கை வருகிறார்.
இலங்கை வரும் அவர் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் போது, இரு தரப்பு வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.
- Home
- முக்கிய செய்திகள்
- நீசா பிஸ்வால் இலங்கை வருகிறார்
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

