தெஹிவளை ஹில் வீதியிலுள்ள விபசார விடுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட சோதனையில் 5 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது விடுதியின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபசார விடுதியின் முகாமையாளர் கொழும்பு 08இல் வசிக்கும் 43 வயதானவர் என்றும் கைது செய்யப்பட்ட பெண்கள் 23-39 வயதுக்குட்டவர்கள் என்றும் பாணந்துறை,வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வருகிறது.
விடுதியில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவருக்கு செல்லுபடியாகும் விசாக்கள் இல்லை என்பதுடன் விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் அதிக காலம் தங்கியிருந்தமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணையில் இந்த விபசார விடுதி பல சமூக ஊடகத் தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.