வவுணதீவு வயல்பகுதில் 3 கைக்குண்டுகள் மீட்பு

151 0

மட்டக்களப்பு- வவுணதீவு, பாவக்கொடிச்சேனை, கற்பகேணி வயல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த 3 கைக்குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நேற்று  மீட்கப்பட்ட குறித்த கைக்குண்டுகளை, வெடிக்க வைத்து செயலிழப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும், குறித்த வயல்பகுதியில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டதுடன், நீதிமன்ற உத்தரவை பெற்று, இன்று வெடிக்க வைக்க நடவடிக்கை  முன்னெடுத்துள்ளதாக  வவுணதீவு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.