ஆதிகோவிலடியில் கடல் தொழிலிலுக்கு சென்று காணாமல் போனவர்கள் கரை சேர்ந்தனர்

314 0

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியில் கடல் தொழிலிலுக்கு சென்று காணாமல் போனவர்கள்  கரை சேர்ந்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நான்கு மணியளவில் கடற்றொழுலிற்கு சென்ற ஆதிகோவிலடியை சேர்ந்த இருவர் நேற்று முன் தினம் முதல் கடலில் தொடர்புகளற்று இருந்த இரண்டு மீனவர்கள் நேற்று கரை திரும்பினர்.

எல்லை  தாண்டிய இந்திய இழுவைமடி படகால் சேதமாக்கப்பட்ட படகு ஒன்றில் தெயவாதீனமாக

படகுகள் சேதமான நிலையில் இருவர் மற்றைய மீனவர்கள் உதவியுடன் கரை சேர்ந்தனர்.

ஒரு படகும் இருவரும் தொடர்புகளற்று இருந்த நிலையில் ஆதிகோவிலடி மீனவர்களால் நேற்று முன்தினமும் இன்றும் பல படகுகளில் சென்று தேடிக் கொண்டிருந்த நிலையில் உள்ளூர் இழுவைப்படகு ஒன்றினால் கட்டியிழுக்கப்பட்டு கொண்டு வந்திருந்த நிலையில் பின்னர் கடலில் தேடிச் சென்ற பிரதேச மீனவர்களால் அழைத்துவரப்பட்ட நிலையில்  வல்வெட்டித்துறை மருத்துவ மனைக்கு இருவரும் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பபட்டுள்ளனர்.