சுதந்திர கட்சியை பிளவுப்படுத்த முயற்சி – தயாசிறி ஜயசேகர

342 0

83183_dayasiri-jayasekara-newஐக்கிய தேசிய கட்சியின் தேவைகளை பூர்த்தி செய்யும் சிலர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுப்படுத்த முனைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
குருநாகல் – கடுகம்பொல தொகுதி இளைஞர் முன்னணியை அமைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.