கன்னியாகுமரி தொகுதி முன்னாள் எம்.பி. எச்.வசந்த குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினமான நேற்று(28) அவரது மணிமண்டபத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி திறந்து வைத்தார்.
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு செயல் தலைவராகவும், கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும், வசந்த் அன்கோ நிறுவன தலைவராகவும் விளங்கியவர் எச்.வசந்த குமார்.