நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் உற்சவம்!

226 0

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள வேளையிலும் கூட நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 14ம் நாள் உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆலய குருக்கள், சிறப்பு பூஜைகளை நடத்தியதுடன் நல்லூர் கந்தசுவாமியை மிகவும் அழகாக அலங்கரித்து, தனது தேவிகளுடன் ஆலய வளாகத்துக்குள்ளேயே வலம் வரச் செய்துள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.