மட்டக்களப்பில் ஒரே நாளில் கொரோனாவால் 8 பேர் பலி

198 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவினால் 8 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, 201 ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளதுடன் 209 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்

ஆரையம்பதி, கோறளைப்பற்று மத்தி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 2 உட்பட 4 பேரும், களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, வவுணதீவு, மட்டக்களப்பு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்

அதேவேளை மட்டக்களப்பில் 72 பேரும், களுவாஞ்சிக்குடியில் 53 பேரும், செங்கலடியில் 25 பேரும், வெல்லாவெளியில் 22 பேர் உட்பட மாவட்டத்திலுள்ள ஏனைய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் உட்பட 201 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது

எனவே இந்த கொரோனா தொற்றை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மக்களாகி நீங்கள் சமூகபெறுப்புடன் நடந்தால் மாத்திரம் இதனை கட்டுப்படுத்தமுடியம் என் அவர் தெரிவித்தார்.