கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் மாணவனின் அசத்தலான கண்டுப்பிடிப்பு!

233 0

கோவிட் தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள் திறக்கப்படாததால், மாணவர்கள் வீட்டிலேயே அதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறது.

சிறுவர்கள் வீட்டில் தங்கியிருப்பது அவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் என்று சில ஆய்வுகள் சொல்லுகின்றன.

எனினும், கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தரம் 10 பயிலும் மாணவரான சுந்தரலிங்கம் பிரணவன் விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு புதிய கண்டுபிடிப்பைச் செய்ய முடிந்த்துள்ளார்.

குறித்த மாணவன் எரிபொருள் இல்லாமல் சோலார் பேனல்களில் இயங்கும் முச்சக்கர வண்டியை உருவாக்கியுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“கோவிட் தொற்றுநோயால், எங்களுக்கு இப்போது பாடசாலைககள் இல்லை. நாங்கள் இணைம் மூலம் கற்பிக்கப்படுகிறோம், ஆனால் பெரும்பாலான நேரங்களில் நாங்கள் வீட்டிலேயே இருக்கிறோம்.

இப்போது, ​​கோவிட் பரவலினால் முன்பு போல் நண்பர்களுடன் விளையாடவும் வழியில்லை. அதனால்தான் நான் ஒன்றை உருவாக்க என் தாத்தாவுடன் இணைந்து பணியாற்றினேன்.

எனது சமீபத்திய வடிவமைப்பு சோலார் பேனல்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மூன்று சக்கர வண்டியாகும். பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் பெரும்பாலான நேரங்களில் நான் என் தாத்தாவுடன் விளையாடுவேன்.

என் தாத்தாவுக்கு மெக்கானிக்காக வேலை செய்யத் தெரியும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விடயங்களை உருவாக்க நான் என் தாத்தாவுடன் வேலை பணியாற்றுகின்றேன்.

எனது தாத்தாவின் உதவியுடன், கடந்த ஆறு மாதங்களாக சோலார் பேனல்களைப் பயன்படுத்தி முச்சக்கர வண்டியை உருவாக்கினேன். சூரிய சக்தியைப் பயன்படுத்தி சார்ஜ் செய்து முச்சக்கர வண்டியை ஓட்டலாம்.

இந்த முச்சக்கர வண்டி ஒரு மணி நேரத்திற்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும். நான் செய்த வடிவமைப்பைப் பார்த்து பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என கூறியுள்ளார்.

Gallery Gallery Gallery Gallery