யாழில் 36000 குடும்பங்கள் இடர்கால நிதி பெற தெரிவு செய்யப்பட்டுள்ளனர் – க.மகேசன்

180 0

யாழ் மாவட்டத்தில் 36000 குடும்பங்கள் இடர்கால நிதி பெற தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் வரை யாழ் மாவட்டத்தில் 18076 குடும்பங்களுக்கு இடர் கால நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்க நிலையில் யாழ் மாவட்டத்தில் அரசின் இரண்டாயிரம் ரூபா இடர் கால நிதி வழங்கும் வேலைத்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்ததுடன் இன்றைய தினம் (25.08.2021) 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அந்தந்த பிரதேச செயலாளர்களின் வழிநடத்தலின் கீழ் 15543 குடும்பங்களுக்கு இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ச்சியாக இக்கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுமென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.