சுகாதார சேவையாளர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!

173 0

சுகாதார சேவையாளர்கள் பெரும் பாதுகாப்பற்ற நிலைக்கு உள்ளாகியுள்ளதாக குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு உரிய வேலைத்திட்டம் ஒன்று இருக்க வேண்டும்.

சுகாதார சேவையாளர் ஒருவர் மரணித்தால், அவரின் கணவனின் அல்லது மனைவியின் அல்லது பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள, பெருமளவான உதவி ஊழியர்கள், இதுவரையில் பணி நிரந்தரமாக்கப்படாதுள்ளனர்.

சுகாதார சேவையை வழங்கும் அவர்கள், ஏதாவது ஒரு வகையில் மரணித்தால், அவர்களுக்கு ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று சுகாதாரத்துறையில் ஏற்படுத்தப்பட வேண்டும் என குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.