இந்தோனேசியாவில் உயரும் கொரோனா – 40 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு

167 0

இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இந்தோனேசியா தற்போது 13-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இந்தோனேசியாவில் நேற்று ஒரே நாளில் 19,106 பேருக்கு புதிதாக  கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது.
அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1,038 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு மொத்த உயிரிழப்பு 1.28 லட்சத்தைத் தாண்டியது.
அங்கு கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 36 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் 2.73 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.