தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கால்ப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது!

160 0

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கால்ப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நோர்வூட் போட்ரி மைதானத்தில் வைத்தே இவர்கள் இன்று இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி மைதானத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி  அயரபி மற்றும் போட்ரி தோட்டங்களைச் சேர்ந்த   சுமார் 40 இற்கும் மேற்பட்டவர்கள் கால்பந்தாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்று காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்தே மைதானம் சுற்றிவளைக்கப்பட்டது. காவல்துறையினரைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் தம்பியோடியுள்ளனர். போட்டியை ஏற்பாடு செய்தவர்களும் தலைமறைவாகியுள்ளனர். எனினும், 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏனையோரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட 11 போரையும் விசாரணைகளின் பின்னர் நாளை ஹட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நோர்வூட் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.