மட்டக்களப்பு மாவட்டத்தில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தீர்மானம்!

160 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட கொவிட்-19 தடுப்பு செயலணி நேற்று கூடிய நிலையில் இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.