வடக்கில் இதுவரை 657,547 பேருக்கு தடுப்பூசி ஏற்றம்

171 0

வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று (13) வௌ்ளிக் கிழமையும் இடம்பெற்றது.

இத்திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.

இதன்படி யாழ். மாவட்டத்தில் 344,766 பேருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் 72,000 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 65,000 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் 77,781 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் 98,000 பேருக்கும் ஆக வட மாகாணத்தில் மொத்தமாக 657,547 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.