அரசியல் கைதிகளுக்கு விடுதலை கொடுக்கப்படவில்லை – சத்திவேல்

250 0

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர விடுதலை கொடுக்கப்படவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனநாயக அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டதன் காரணமாகவே தமிழர்கள் தம் அரசியல் கொள்கைகளை வகுத்து சுய கௌரவத்தோடு வாழ்வதற்கான பயணத்தை தொடர்ந்தனர்.

அத்தோடு பயங்கரவாத சட்டத்தை நிறைவேற்றி தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களையும் அவர்களுக்கு துணை நின்றோரையும் கைது செய்து சித்திரவதை செய்து சிறைகளுக்குள் தள்ளினர்.

இக் கொடுமைக்கு காரணமானவர்கள் நல்லவர்களாக திருந்த வேண்டும். இதற்கு தடையாக இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்காமலிருப்பதே பாரிய குற்றமாகும்.

அரசியல் கைதிகள் என நாம் அடையாளப்படுத்தபடுவோர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அதுவே தமிழர்களுக்குரிய கௌரவமாக அமைவதோடு, சுயகௌரவம், சுதந்திரம், சுதந்திர நடமாட்டம் என்பவை உறுதி செய்யப்பட வேண்டுமென அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.