தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹஹெதென்ம வௌியேறும் இடத்திற்கு அருகில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
இன்று (07) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதிக்கு வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதால் அதிவேக வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.