பால்மாவின் விலையை சுமார் 200 ரூபாயால் அதிகரித்தால் பற்றாக்குறை தீர்க்கப்படுமாம்

168 0

பால்மாவின் விலையை சுமார் 200 ரூபாயால் அதிகரித்தால், தற்போதைய பால்மா பற்றாக்குறை தீர்க்கப்படும் என்றும் அத்தகைய அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் உலகளாவிய விநியோகச் சங்கிலி சரிந்ததால், போக்குவரத்து மற்றும் கப்பல் கட்டணம் உயர்ந்துள்ளது என்று சுட்டிக்காட்டிய  அமைச்சர், பால்மா விலையை அதிகரிக்க அனுமதிக்காத காரணத்தாலேயே இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஒரு சிறிய பக்கெட் பால்மாவைக் கூட விலைக்கு வாங்குவதற்கு  சந்தையில் பால்மாவுக்கான கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.