கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றொரு ஆசிரியர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடகாவெல பகுதியை சேர்ந்த 31 வயதான ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சோதனையில் அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பதுளையில் உள்ள பிரபல தமிழ் மகளிர் பாடசாலையில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஒருவரும் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.