இலங்கை பிரதான கேந்திர நிலையமாக மாறும் – சீன வெளிவிவகார அமைச்சர்

394 0

1-720x480-300x200சீனாவின் கடற்போக்கு வரத்துடன் இணைவதன் ஊடாக இலங்கை இந்து சமுத்திரத்தின் பிரதான கேந்திர நிலையமாக மாறும் என இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வேன் யீ தெரிவித்துள்ளார்.
சீன வெளிவிவகார அமைச்சர் வேன் யீ 2 நாள் உத்தியோக பூர்வ சுற்றுப்பயணம் ஒனறை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இலங்கை வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் சீன வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கை இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்துக்கான பிரதான கேந்திர நிலையமாக வளர்ச்சி பெறுவதற்கு சீனா ஒத்துழைப்பு வழங்குவதாக அவர்குறிப்பிட்டார்.
எதிர்வரும் 5 வருடங்கள் கடல்போக்குவரத்து அபிவிருந்தியையே சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த வேன் யீ, அதன் ஊடாக இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.