மூன்று எம்.பிக்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது

239 0

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிகளில் மூன்று எம்.பிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஒரேநாளில் இதுவரையிலும் மூன்று எம்.பிகளுக்கு தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான   ரோஹண திஸாநாயக்கவுக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான திலிப் வெதஆராச்சிக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.