கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சஜித்

147 0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். வைத்தியர்களின் கடுமையாக ஆலோசனையின் பேரில் தான் தடுப்பூசி பெற்றுக்கொண்டதா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சஜித் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பின்னர் நாட்டின் கடைசி நபர் தடுப்பூசி பெறும் வரை நான் தடுப்பூசி பெற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் பொதுமக்களுக்காகத் தனது தடுப்பூசியைத் தியாகம் செய்வதாக அவர் முன்னதாக தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுக்குள்ளான சந்தர்ப்பத்தில் சிகிச்சை வழங்கிய வைத்தியர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் நான் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்தேன். கொரோனா தடுப் பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் மீண்டும் குறித்த தொற்றுக் உள்ளாக வாய்ப்பிருப்பதாகவும் அதனால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்கு வைத்தியர்கள் கடுமையாக எச் சரித்ததாகவும், தற்போதைய தனது உடல்நிலையின் படி, நான் அவர்களின் உத்தரவை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித் துள்ளார்.