மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு தொடரும்!

190 0

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மறு அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமைக்கு கொண்டுவருவதற்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தொிவித்துள்ளார்.

அதேவேளை ஓகஸ்ட் முதலாம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் மாகாணங்களுக்கிடையில் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.