இலங்கை மத்திய வங்கியில் 2016ஆம் ஆண்டு பிணைமுறி மோசடி தொடர்பிலான ட்ரயல் அட்பார் வழக்கு விசாரணையை, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் இன்றி, முன்னெடுப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அஜான் புஞ்சிஹேவாவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.