இலங்கை கொரோனா நான்காவது அலையின் முதல் பாதியை நெருங்கியுள்ளதாக இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பில் 30 சதவீதமானோர் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.