கிளிநொச்சி கெளதாரிமுனை கடலில் மூழ்கி ஒருவர் பலி!

166 0

கிளிநொச்சி – கெளதாரிமுனை கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மீசாலை பகுதியை சேர்ந்த 30 வயதான தபாலக உத்தியோகத்தரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நண்பர்களோடு நேற்று (18),
கெளதாரிமுனைக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் அங்குள்ள கடலில் குளித்துள்ளனர். இதன்போதே, குறித்த இளைஞன் கடலில் மூழ்கியுள்ளார்.

கடலில் மூழ்கிய இளைஞனை நண்பர்கள் மீட்டு பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.