மட்டக்களப்பு பிரபல போதைபொருள் வியாபரி கைது!

155 0

மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனைக்கு காரில் வியாபாரத்துக்காக 13 இலச்சம் ரூபா பெறுமதியான 100 ஜஸ் போதைப் பொருளை கடத்திச் சென்ற பிரபல போதைப் பொருள் வியாபாரி டிலக்ஷன் உட்பட 3 பேரை வாழைச்சேனை கும்புறுமூலை சந்தியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) இரவு இராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்து வாழைச்சேனை காவற்துறையினர் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலையிலுள்ள இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு இராணுவ புலனாய்வு பிரிவினர் கும்புறுமூலைச் சந்தியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனையை நோக்கி பிரயாணித்த காரை வழிமறித்து சோதனையிட்டனர்.

இதன் போது காரில் மறைத்துவைக்கப்பட்ட சுமார் 13 இலச்சம் ரூபா பெறுமதியான 100 கிராம் ஜஸ் போதைப் பொருளை மீட்டதுடன் பிரபல போதைப் பொருள் வியாபரியான டிலக்ஷன் உட்பட 3 பேரை கைது செய்து காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவற்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த குறித்த போதைபொருள் வியாபாரியின் வீட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டபோது குறித்த வியாபாரியும் அவரது தாயாரும் தப்பி ஓடிய நிலையில் 15 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் ஒருவரை கைது செய்ததுடன் அங்கு போதைப்பொருள் போதிசெய்யும் இயந்திரங்கள் உட்பட பலவற்றை விசேட அதிரடிப்படையின் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.