வாழைச்சேனை பிரைந்துறைச்சேனையில் ஹெரோயினுடன் இருவர் கைது!

511 0

மட்டக்களப்பு வாழசைச்சேனை காவற்துறை பிரிவிலுள்ள பிறைந்துரைச்சேனை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 2 பேரை  நேற்று சனிக்கிழமை (17) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை காவற்துறையினர் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் குறித்த பகுதியில் சம்பவதினமான  நேற்று இரவு காவற்துறையினர் சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கையில் 1600 மில்லிக்கிராம் போதைப் பொருளுடன் 21 வயதுடைய ஒருவரையும் 1300 மில்லிக்கிராம் போதைப் பொருளுடன் 26 வயதுடைய ஒருவர் உட்பட இருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்று இரவு சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் ஆற்றுமணல்  ஏற்றிச் சென்ற ஒருவரை கைது செய்ததுடன் உழவு இயந்திரத்தை மீட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்