மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீறி பயணம் செய்ய முயன்ற மேலும் 338 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்- அஜித் ரோகண

247 0
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி நேற்றைய தினம் பயணிக்க முற்பட்ட 338 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய, முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளியைப் பின் பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 368 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

அதன்படி குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 117 பேர், கண்டி பகுதியைச் சேர்ந்த 51 பேர், கம்பளை பகுதியைச் சேர்ந்த 31 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரை 50,750 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக அஜித் ரோகண தெரி வித்துள்ளார்.
நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் உள்வரும், வெளியேறும் 14 நுழைவாயில்களில் பயணக் கட்டுப் பாடுகளை மீறி பயணம் செய்ய முயன்ற 338 பேர் எச் சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டனர்.
குறித்த சுற்றிவளைப்பு மேலும் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் தெரி வித்துள்ளார்.
அத்துடன், சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட விதிமுறை கள் தொடர் பான நடவடிக்கை கள் இன்றும் மேற்கொள்ளப்படும் என்று அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.