மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்று விட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதற்கான தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? என்பது மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பிளஸ்-2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக பொதுத்தேர்வு நடத்தப்படாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் சென்னையில் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘‘பிளஸ்-2 மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும்? என்று ஏற்கனவே அறிவித்தபடி, மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அனைத்தும் தயார்நிலையில் இருக்கிறது. முதல்-அமைச்சர் எப்போது வெளியிட சொல்கிறாரோ?, அன்றைய தினம் தேர்வு முடிவு வெளியிடப்படும்.