ரிஷாட் பதியுதீனின் வீட்டில் சேவையாற்றி வந்த சிறுமி உயிரிழப்பு!

157 0

பொரள்ள, பௌத்தாலோக மாவத்தையில் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் சேவையாற்றி வந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த ஜூன் மாதம் மூன்றாம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுமி நேற்று (15) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொரள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.