யாழில் பாடசாலை சார்ந்த 72 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி

210 0

ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா ஊழியர்கள் என யாழில் 72 சதவீதமானவர்களுக்கு கொரோனாவுக்கான சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ் மாவட்டத்தில் பாடசாலை சார்ந்த 7,432 பேர் இதுவரை கொரோனாவுக்கான சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு நாடு முழுவதுமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் முதல் இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்பாண மாவட்டத்தில் 51,390 பேர் இதுவரை பெற்றுக்கொண்டுள்ளனர்.