அரச நிறுவனங்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுநர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பினை இன்று (14) முன்னெடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமைக்கு எதிராக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனை, ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான சட்டமூலத்திற்கு எதிராக ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சங்கங்களினால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தநிலையில், அந்த ஆர்ப்பாட்டங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து அவற்றில் கலந்துகொண்ட பலர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்த, இதனை கண்டித்து ஆசிரியர் சங்கங்கள் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

