தாதியர் சங்கத்தின் ஏழு கோரிக்கைகளில் ஐந்திற்கு தீர்வு

239 0

தாதியர் சங்கத்தின் ஏழு கோரிக்கைகளில் ஐந்திற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தீர்வை முன்வைத்துள்ளார்

அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் முன்வைத்த ஏழு கோரிக்கைகளில், ஐந்து கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எஞ்சிய இரண்டு கோரிக்கைகளுக்கும், அடுத்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தீர்வுகளை வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது

அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்துடன் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்த தீர்மானங்கள் எடுக்கபட்டுள்ளது .

தாதியர் தேசிய பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல்

நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2017. 12. 07ஆம் திகதிய 32/2017ஆம் இலக்க சுற்றுநிரூபத்தின் ஊடாக இடை நிறுத்தப்பட்ட பணிக்குழாம் நிலையை மீண்டும் வழங்குதல்

இடைநிறுத்தப்பட்டுள்ள வகுப்பு III இலிருந்து வகுப்பு II க்கு பதவி உயர்வை ஐந்தாண்டுகளிலும் மற்றும் வகுப்பு II இலிருந்து வகுப்பு I க்கு ஏழு ஆண்டுகளிலும் தரம் உயர்த்துதல்

ரூ .20,000 வருடாந்த சீருடைக் கொடுப்பனவை வழங்குதல்

தற்போதைய 36 மணிநேர வேலை நேரத்தை வாரத்துக்கு ஐந்து நாட்கள் (30 மணிநேரம்) நேரமாகக் கருதுவதை விசேட குழுவொன்றின் ஆய்வுக்கு உட்படுத்தல்

ஆகிய ஐந்து விடயங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

ரூ .10,000 கொடுப்பனவு மற்றும் 2014.12.24 ஆம் திகதியன்று நிதி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை சம்பளத்தின் 1/100 மேலதிக சேவைக் கொடுப்பனவு ஆகியவற்றை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்க, நான் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி, அரச சேவை தாதியர் சங்கம் முன்வைத்த ஏழு கோரிக்கைகள் குறித்தும் நாம் விசேட கவனம் செலுத்தபட்டுள்ளது

அரச சுகாதாரத் துறை மீது அரசாங்கத்துக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதனையும் தாதியர் சேவைக்கு கூடிய அங்கீகாரத்தை அளிப்பதனையும், தாதித் தொழில் வல்லுநர்களுக்கு உரிய இடத்தை நாம் வழங்குவோம் என்பதனையும் வலியுறுத்தப்பட்டுள்ளது