யாழ் முதியோர் இல்லமொன்றில் பதிவான கொரோனா உயிரிழப்பு

236 0

யாழ்.தொல்புரம் பகுதியில் உள்ள சிவபூமி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

64 வயதான பொன்னையா சத்தியகுணசேகரன் என்ற முதியவர் உயிரிழந்த நிலையில் இறப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு சுகாதார அதிகாரிகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.