காவல் நிலையங்களுக்கு 2, 000 முச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு!

302 0

பிரஜா காவல்துறை எண்ணக்கருவை பலப்படுத்தி குற்றம், போதைப்பொருள் தடுப்பு மற்றும் உளவுத்துறை, சிவில் கடமைகள் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் செயற்பாட்டிற்கு தேவையான 2,000 முச்சக்கர வண்டிகளை காவல்துறையினருக்கு குறியீட்டு ரீதியாக வழங்கும் நிகழ்வு இன்று பிரதமர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

அரசாங்கத்தின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ வேலைத்திட்டத்திற்கு அமைய அனைத்து காவல்நிலையங்களிலும் போக்குவரத்து சேவையை பலப்படுத்தும் வகையில் இவ்வாறு முச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, மீகொட, கொத்தட்டுவ, யக்கல, பெம்முல்ல, பல்லேவெல, மிஹிஜய செவன, குருந்துவத்த, எகொடஉயன மற்றும் மத்தேகொட ஆகிய காவல்நிலையங்களுக்கு முதற்கட்டமாக முச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.