மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அன்றாட உணவுக்காக சிரமப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது
இதனடிப்படையில் கிரான்குளம், செட்டிபாளையம், களுவன்கேணி உட்பட்ட கிராமங்களுக்கு பேரவையினால் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.பேரவையின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் பேரவையின் செயலாளர் சா.மதிசுதன், பேரவையின் பொருளாளர் ந.புவனசுந்தரம், பேரவையின் இணைப்பாளர் ச.விஜிதரன் ஆகியோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைத்தனர்.