சிறுமியை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்த துறவி ஒருவர் உட்பட 17 பேர் கைது

279 0

இணையத்தில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்த மற்றும் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் துறவி ஒருவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இணையத்தில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்த குற்றச்சாட்டில், கடந்த ஜுன் மாதம் 7ஆம் திகதி, கல்கிஸை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளார். சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து இதுத் தொடர்பில் 17பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.