யாழ்ப்பாணத்தில் வீடுபுகுந்து வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!

194 0

யாழ். புத்தூர் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 3 மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இத்தாக்குதலை நடத்தியுள்ளது. எனினும் தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.