புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு திடீர் உடல் நல பாதிப்பு

207 0

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு நேற்றைய தினம் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் இன்று தொழிற்சாலைக்கு வருகைதந்த ஊழியர்கள் பலர் மயக்கமடைந்ததாகவும் பின் அவர்கள் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது.


இதேவேளை குறித்த ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டு ஊழியர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.

ஏற்கனவே நேற்றைய தினம் கிளிநொச்சி, வவுனியா ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்கள் தடுப்பூசி ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.