நாட்டில் கொரோனாவால் மேலும் 48 பேர் மரணம்!

173 0

நாட்டில் நேற்று முன்தினம் (24) கொரோனா தொற்றால் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (25) விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 22 பெண்களும் 26 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,862 ஆக அதிகரித்துள்ளது.