நெல்லியடியில் விபத்து- குடும்பஸ்தர் பலி

187 0

மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். பின்னிருக்கையில் அமர்ந்து சென்றவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நெல்லியடி வதிரியில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த வீரவாகுப்பிள்ளை கெங்கேஸ்வரன் (வயது-32) என்பவரே உயிரிழந்தார். அவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.