உரிமைக்காக குரல் கொடுப்பவர் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்-ஆர்ப்பாட்டப் பேரணி 26.6.2021 Germany,Düsseldorf.

482 0

தமது உரிமைக்காக ஊர்வலங்களை மற்றும் ஒன்றுகூடல்களை நடத்தும் மக்களின் உரிமையை மேலும் ஒடுக்குவதற்காக காவல்துறைக்கு கூடுதல் உரிமையை வழங்கும் விதமாக, இந்த கொரோனா தொற்று நோய் இடர்காலத்திலும் NRW மாநிலத்தில் ஒரு புதிய சட்டம் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இச் சட்டம் நடைமுறைக்கு வருமானால் எம்போன்று புலம்பெயர்ந்து வாழும் மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இச் சட்டம் நடைமுறைக்கு வருவதை யேர்மன் மற்றும் பல்நாட்டு மக்களுடன் இணைந்து தமிழ் மக்களாகிய நாமும் பெருமளவில் ஒன்றுதிரண்டு, எமது அடையாளங்களை ஏந்தியவாறு இச் சட்டத்தை எதிர்ப்போம். 26.6.2021 சனிக்கிழமை 13.00 மணிக்கு டுசில்டோர்ப் நகர புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள DGB Haus முன்பாக அணிதிரள்வோம் வாரீர்.