ஹெரோயினுடன் இருவர் கைது!

203 0

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுண்டிக்குளம் பகுதியில் 60 கிராம் ஹெரோயினுடன் இருவரை தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து இரண்டு சந்தேக நபர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதை அடுத்து அவர்கள் இருவரையும் பொலிஸார் சோதனையிட்ட பொழுது 60 கிராம் ஹெரோயின் அவர்களிடம் இருந்த மீட்கப்பட்டுள்ளது.

அத்தோடு அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேக நபர் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.