அமீரகத்தில் ஒரே நாளில் 6 பேர் பலி

209 0
அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 8 ஆயிரத்து 70 ஆக உயர்ந்தது.

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில், 2 லட்சத்து 53 ஆயிரத்து 7 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதன் முடிவுகளில், 1,942 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 8 ஆயிரத்து 70 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் 1,918 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 87 ஆயிரத்து 160 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 6 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,747 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 19 ஆயிரத்து 163 பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.