சந்தியாறு அம்பூஸ்குடா பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்று மீட்பு

299 0

கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சந்தியாறு அம்பூஸ்குடா பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஜே.ஆர் ரக கைக்குண்டு ஒன்று நேற்று (15) மீட்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, வாழைச்சேனை காகித ஆலை பகுதியில் வாழைச்சேனை பொலிஸார் குறித்த கைக்குண்டை மீட்டுள்ளனர்.

குறித்த கைக்குண்டு கடந்த யுத்த காலப்பகுதியில் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.